Friday, June 18, 2010

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை !!






மழை காலத்து காலை நேரம்
அலுவலக வாயில் ஓரம்

தேரிலே
வந்திறங்கினாள்
என் தேவதை !

தேரோட்டியாக
அவள் தந்தை !

அதுவரை இடைவிடாது
பெய்துவந்த அடைமழையும்
அவளுக்காக சிலகணம்
பணிந்து நின்றது !!

தேரிலிருந்து இறங்கியவள்
தூறலிலே நனைந்து
அலுவலகப் பணிமனைக்குள்
அடியெடுத்து செல்லும்வரை !

நான்காம் தளத்திலிருந்து
அவளையே கவனித்திருந்தேன்
கையில் தேநீர் குவளையுடன் !

மெல்லத் துள்ளியவள்
உள்ளே வந்தவுடன்
மீண்டும் அடைமழை !
இம்முறை
என் மனதிற்குள்ளும் தான் !!

3 comments:

Prabhu Shankar L said...

Hi Nimal...the poems are really good da machi...i like them...you write...?

Prabhu Shankar L said...

Hi Nimal...all of these are really good da machi...i like them...you write...?

Johnson said...

Nice Senior...!!!