Tuesday, June 14, 2011

'பருவ' மழை !!






வானகத்து தேவதை
பூப்பெய்தி விட்டாள் !
நிலவிற்கு இன்று
நீராட்டு விழா !
ஆம்
'பருவ' மழை !!

Sunday, December 19, 2010

அன்பில் ஓர் உரையாடல் !



'எனக்காக ஒரு கவிதை சொல்வாயா ?'
என்றது கவிதை !
அவள் பெயரை உச்சரித்தேன்
என்னே அதிசயம்
நிலா
புன்னகைக்கிறதே .....

'எனக்காக ஒரு முறை பாடுவாயா ?'
இம்முறை நான்
'பாடத் தெரியாதே '
என்று பாடினாள்
அந்த பதினேழாம் ராகம் ......

Monday, November 15, 2010

காதல் !!




உறைந்து போன என் உயிரை கூட
உசிப்பி விட்டது உன் வாசம் ! - நான்
மறைந்து போகும் தருணம் கூட எனை
உயிர் பெறச்செய்யும் உன் சுவாசம் !!

காதல் வாழ்க !!

Friday, June 18, 2010

நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை !!






மழை காலத்து காலை நேரம்
அலுவலக வாயில் ஓரம்

தேரிலே
வந்திறங்கினாள்
என் தேவதை !

தேரோட்டியாக
அவள் தந்தை !

அதுவரை இடைவிடாது
பெய்துவந்த அடைமழையும்
அவளுக்காக சிலகணம்
பணிந்து நின்றது !!

தேரிலிருந்து இறங்கியவள்
தூறலிலே நனைந்து
அலுவலகப் பணிமனைக்குள்
அடியெடுத்து செல்லும்வரை !

நான்காம் தளத்திலிருந்து
அவளையே கவனித்திருந்தேன்
கையில் தேநீர் குவளையுடன் !

மெல்லத் துள்ளியவள்
உள்ளே வந்தவுடன்
மீண்டும் அடைமழை !
இம்முறை
என் மனதிற்குள்ளும் தான் !!

குற்றவாளி !!



வழியில்
சட்டென்று போகையில் - உன்
விழியின்
ஓரப் பார்வையால் - எனை
ஒட்டுமொத்தமாக கொன்றுவிட்டாய் !
குற்றம் என் ஒன்று !
[ இ பி கோ 302 ]

அதே கணம்
இதயத்தை இடம் மாற்றி
போலி அறுவை சிகிச்சையும் செய்துவிட்டாய் !
குற்றம் என் இரண்டு !!
[ இ பி கோ 419 ]

இவ்விரு குற்றங்களுக்காக
உன்மேல் புகார் கொடுக்க
அருகில் வந்து
பெயரை கேட்டேன் .....

ஆறுமாத சிறை தண்டனையில்
பெண்களை கேலி செய்த குற்றத்திற்காக
நான் !
[ இ பி கோ 298 ]

Saturday, June 5, 2010

சரித்திரம் !



என்
சுயசரிதையை எழுத
நான் முடிவு செய்து விட்டேன் !
அதற்கு பொருத்தமான பெயரை
இருபத்தி நான்கு ஆண்டுகளில்
கண்டு பிடித்து விட்டேன் !
" ஒரு தரித்திரத்தின் சரித்திரம் ! "

பின் குறிப்பு : இப்பெயருக்கு காப்புரிமை பெறப்பட்டுள்ளது.
அனுமதியின்றி பயன்படுத்துவோர் [ குறிப்பாக தமிழ் படங்களுக்கு
பெயர் தேடுவோர் ] சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாக்கப்படுவர் .

Saturday, April 24, 2010

சி(ற)வந்த பாடம் !



நான்
வீழ்ச்சியுறும் போதெல்லாம்
என் இரத்தம் - எனக்கு
குத்தி காட்டியது ...
'நம்பிக்கையோடு இரு ' - ஆம்
B Positive !!

ஓமணப் பெண்ணே !



அது
இறைவனின் பூமி யென்றால்
அவள்
தேவதை யென்றால்
நான்
மோட்சமடைவது எப்போது !!

கவிஞன்





பொய்யை மெய்யாக்குபவன் !!
உண்மையை உயிராக்குபவன் !!




ஆஸ்கர்



பிரம்மனுக்கும் ஓர்ஆஸ்கர் கிடைத்தது !

அழகிய ஓவியமாய் உன்னை படைத்ததற்கு !!